அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் விளக்கு பூஜை!
ADDED :3803 days ago
விருதுநகர்: மழை வேண்டி, நோய் நீங்கி, வியாபாரம், விவசாயம் செழிக்க வேண்டி அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் விருதுநகர் மிளகாய் வத்தல் வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் விளக்கு பூஜை நடந்தது. சங்க நிறுவனர் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமி ஆசி வழங்கி பூ ஜையை துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது.