திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருபணிகள்!
ADDED :3723 days ago
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருபணிகள் நடந்து வருகிறது. இதில் கோபுரங்களில் பழமை மாறாமல் உள்ள மரபொருள்களை பாதுகாக்கவும் மற்றும் கோபுரத்தில் உள்ள செடிகளை அகற்றவும் மூலிகை ரசாயன மருத்து தயாரிக்கும் முறை குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை தொல்லியல்துறை நிபுணர் டாக்டர் பாலசுப்பிரமணியன் செயல் முறை விளக்கம் நடத்தினார். உடன் கோவில் இணை ஆணையர் செந்தில்வேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.