உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் பூதத்தாழ்வார் அவதார உற்சவம்!

மாமல்லபுரம் பூதத்தாழ்வார் அவதார உற்சவம்!

மாமல்லபுரம்: மாமல்லபுரம், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், இன்று (13ம் தேதி) துவங்குகிறது.

மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக
விளங்குகிறது. இத்தலம் பூதத்தாழ்வார் அவதரித்த சிறப்புக்குரியது. கோவில் அருகில், நந்தவன தோட்ட குருக்கத்தி மலரில், ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளில், கதை தோற்றத்தில், அவர் தோன்றினார். ஸ்தலசயன பெருமாள் கோவிலில், தனி சன்னிதியில் அவர் வீற்றிருக்கிறார்.

இக்கோவிலில், அவரது அவதார உற்சவம் இன்று துவங்குகிறது. காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம்; மாலை, 3:00 மணிக்கு, நாலாயிர திவ்விய பிரபந்த சேவை, திருப்பாவை சாற்றுமறை; மாலை, 5:00 மணிக்கு, கேடய உற்சவம் மற்றும் சுவாமி வீதியுலா; அதை தொடர்ந்து, 6:00 மணிக்கு, திருவாய்மொழி சாற்றுமறை என, நடைபெறும்.

இச்சேவைகள், தினமும் மேற்குறிப்பிட்ட நேரத்தில், 20ம் தேதி வரை நடைபெறும்.
முக்கிய உற்சவங்கள் 21ம் தேதிகாலை, 9:00 மணி, பூதத்தாழ்வார் திருத்தேரில் வீதியுலா;
திருமஞ்சனம், மாலை, 4:30 மணி; சுவாமி வீதியுலா, இரவு, 8:00 மணி. 22ம் தேதிகாலை, 6:30
மணி, பூதத்தாழ்வார் மூலவர் திருமஞ்சனம்; ஆதிவராக பெருமாள் கோவிலில் மங்களாசாசனம், காலை, 9:00 மணி; மண்டப அலங்கார திருமஞ்சனம், மாலை, 4:30 மணி; ஸ்தலசயன பெருமாள், பூதத்தாழ்வார் ஆகியோர் வீதியுலா, இரவு, 8:00 மணி; திருவாய்மொழி சாற்றுமறை, இரவு, 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !