உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடல் சுந்தரவேலவர் கோயிலில் நவராத்திரி விழா

கூடல் சுந்தரவேலவர் கோயிலில் நவராத்திரி விழா

கூடலூர்:கூடலூர் கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மன், மகாலட்சுமி, சரஸ்வதி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுருளிமலை-பழநிமலை பாதயாத்திரை குழு பெண்கள், பஜனைப் பாடல்களை பாடினர். தொடர்ந்து விளக்கு பூஜை நடந்தது. கோயிலில் வைக்கப்பட்டுள்ள அலங்கார கொலு பொம்மைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கொலு பொம்மைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !