உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு!

செஞ்சி பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு!

செஞ்சி: செஞ்சியை அடுத்த காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் பாபா ஆராதனை தினத்தை  முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர்.  செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு, செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர்  கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 3 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால் அபி÷ ஷகம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.  பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார். செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர்  கோவிலில், அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜலாம் பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி  வழிபட்டனர். திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  முக்குணம் முக்குன்ற நாத உடையார்  கோவிலில் முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மகா தீபாராதனையும், சாமி கோவில் உலாவும் நடந்தது. பூ ஜைகளை அர்ச்சகர் செல்வம் செய்தார். மேலச்சேரி மத்தளேஸ்வரர் குடைவரை கோவிலில், மத்தளேஸ்வரர், பிரகன்நாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு  அபிஷேகம், அலங் காரம் செய்தனர். மகா தீபா ராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைகளை சிவ நாதன் குருக்கள்  செய்தார். தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக் தர்கள் அகல் விளக் கேற்றி  வழிபட்டனர். பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !