திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி யாக சாலை பூஜை!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு தினம் காலை யாகசாலை பூஜைகள் நடக்கிறது. சஷ்டியை முன்னிட்டு நவ. 12 முதல் யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்குடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி சொம்புகளில் புனிதநீர் நிரப்பி வைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனைகள் நடக்கிறது. நவ. 17 காலையில் சண்முகருக்கு தங்க குடத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ. 16ல் கோயில் பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், நவ. 17 மாலை 4.30 மணிக்கு சன்னதி தெருவில் எழுந்தருளியுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார லீலையும், நவ. 18 காலையில் சட்டத் தேரில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி கிரிவீதி. ரதவீதிகளில் தேரேட்டமும் நடக்கிறது. கோயில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், மாவிளக்கு வைத்து சஷ்டி விரதத்தை முடிப்பர். மாலை 4 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தைல புண்ணியாகவாசனமாகி, தயிர் சாதம் படைக்கப்பட்டு, பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.