உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வேல் வாங்குதல்!

திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வேல் வாங்குதல்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம், சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று(நவ., 16) நடக்கிறது. கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி நாளை (நவ., 17) சூரசம்ஹார லீலை நடக்கிறது. இதற்காக, இன்று மாலை 6.30 முதல் 7.30 மணிக்குள் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சத்திய கிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருள்வார். மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து, திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டப்படும். அம்பாள் கரத்திலுள்ள நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு, கம்பத்தடி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சாத்துப்படியாகும். தீபாராதனைகள் முடிந்து சுவாமி பூ சப்பத்தில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !