திருக்கோவிலூர் ஜீயர் பிரம்மரதத்தில் வீதியுலா
ADDED :3654 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஜீயர் பிரம்மரதத்தில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் பிரம்மரதம் ஏறும் வைபவம், நேற்று நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு கைசீகபுராணம் வாசிக்கப்பட்டது. சுவாமிக்கு 12 முறை துவாதசி ஆராதனை நடந்தது. காலை 7:00 மணிக்கு ஜீயர் சுவாமிகள், பிரம்மரதத்தில் புறப்பாடாகி, முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து ஜீயர் மடத்தை அடைந்தார். பாகவத கோஷ்டிகளின் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. பக்தர் களுக்கு ஜீயர் சுவாமிகள் ஆசிர்வாதம் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.