உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சூலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சூலூர்: பொத்தியாம்பாளையம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இங்கு மகா மாரியம்மன்,  விநாயகர் கோவில் கோபுரங்கள் புதிப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடந்தன. பரிவார மூர்த்திகளுடன் பர்வதவர்தனி சமேத ராமநாத சுவாமிக்கு, புதிய  சன்னதிகள் அமைக்கப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த, 18ம்தேதி மாலை, 5:30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது.  மூன்று கால யாக  பூஜைகள் முடிவுற்று, நேற்று முன்தினம் நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி நடந்தது. பூஜிக்கப்பட்ட கும்பங்கள், மேள, தாளத்துடன் ÷ காவிலை வலம் வந்தன. விமானங்கள் மற்றும் விநாயகர், மகா மாரியம்மன், சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.  விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !