சென்னையில் இயல்புநிலை திரும்ப பெங்களூவில் யாகம்
ADDED :3724 days ago
பெங்களூரு : சென்னையில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால், மொட்டைமாடி பகுதிகளுக்கு அவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவுப்பொட்டலங்களும், அவர்களை மீ்ட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளர். இந்நிலையில், சென்னையில் உள்ள தங்களது உறவினர்கள் பத்திரமாக இருக்கும் பொருட்டும், சென்னையில் மீண்டும் இயல்பு நிலை திரும்ப வேண்டி, பெங்களூருவில் யாகம் வளர்த்தனர்.