உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் கோவிலில் மஹா நவ சண்டியாகம்

ஓசூர் கோவிலில் மஹா நவ சண்டியாகம்

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 16ம் ஆண்டு மகா நவ சண்டி யாகம் விழா வரும் 5ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி 5ம் தேதி காலை 10.30 மணிக்கு கணபதி ஹோமம், பகல் 12 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை 4 மணிக்கு நீர்க்குடம் புறப்படுதல், மாலை 6 மணிக்கு வாஸ்த்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடக்கிறது. மாலை 7 மணிக்கு கலசஸ்தாபனம், கலசபூஜை, 8.30 மணிக்கு நெய்வேத்யம், மஹா தீபாராதனை நடக்கிறது. வரும் 6ம் தேதி காலை 8 மணிக்கு கலசபூஜை, ருத்ரஹோமம், 10 மணிக்கு மகா நவ சண்டி யாகம், பகல் 12 மணிக்கு மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, மாலை 5 மணிக்கு விசேஷ சந்தி 6 மணிக்கு கலசபூஜை, ருத்ர ஹோமம், நடக்கிறது. இரவு 7 மணிக்கு லட்சுமி ஹோமம், மகா நவ சண்டி யாகம், 8.30 மணிக்கு மகா பூர்ணா ஹூதி, மகா தீபாராதனை ஆகியவை நடக்கிறது. வரும் 7ம் தேதி காலை 7 மணிக்கு கலச பூஜை, ருத்ர ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், 9 மணிக்கு மகா நவ சண்டி யாகம், 10 மணிக்கு மகா சங்கல்பம், வடுக பூஜை, கன்யா பூஜை, 11 மணிக்கு நவ சண்டி யாகம், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, கலசம் புறப்படுதல் ஆகியவை நடக்கிறது. பகல் 1.30 மணிக்கு விஷேச பூஜைகள், தீபாராதனை நடக்கிறது. விழா நாட்களில் தினம் பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !