உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தானந்தா கோவிலில் 14ம் தேதி சங்காபிஷேகம்

சித்தானந்தா கோவிலில் 14ம் தேதி சங்காபிஷேகம்

புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், வரும் 14ம் தேதி 108 சங்காபிஷேகம் நடக்கிறது. கார்த்திகை நான்காம் சோமவாரத்தையொட்டி சிந்தானந்தா சுவாமிக்கு சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. அன்று காலை 6:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை, 8:00 முதல் 9:00 வரையில் அபிஷேகம், 9:00 மணி முதல் 11:00 வரையில் சங்காபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை, இரவு அர்த்தஜாம பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான குருக்கள் மற்றும் அறங்காவல் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !