உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி பிறந்தது.. திருப்பாவை பட்டு சேலையில் ஆண்டாள் தரிசனம்!

மார்கழி பிறந்தது.. திருப்பாவை பட்டு சேலையில் ஆண்டாள் தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பாவை பாசுரங்கள் கொண்ட பட்டு அணிந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  ரெங்கமன்னாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பஞ்சாங்கத்தின் கணக்குபடி மார்கழி மாதம் நேற்று இரவு 7.42 மணிக்கு பிறந்தது. இதனை முன்னிட்டு தான் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை பாசுரங்கள் கொண்ட பட்டுசேலையை அணிந்து ஆண்டாள், ரெங்கமன்னாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக கண்ணாடி மாளிகையில் ஆண்டாள்,ரெங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பத்ரிநாராயணா பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். வேதபிரான்பட்டர் வழித்தோன்றல் சுதர்சன பட்டர், வெங்கடேஸ் பட்டர், ஸ்தானிகம் ரமேஷ், ஆண்டாள் சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். இதனை முன்னிட்டு ஆண்டாள் கோயில் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !