உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தா கோஷம் முழங்க உலகளந்த பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு!

கோவிந்தா கோஷம் முழங்க உலகளந்த பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு!

திருக்கோவிலுõர்: பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க திருக்கோவிலுõர் உலகளந்த பெருமாள் கோவில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, திருக்கோவிலுõர் உலகளந்த பெருமாள் கோவிலில், காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாலை 3:00 மணிக்கு மூலவர் பெருமாள் முத்தங்கி சேவையில் விஸ்வரூப தரிசனம், 4:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளினார். பக்தர்களின் பாதம் தாங்கிகளில், கோவிலை வலம்வந்து, உடையவர் சன்னதியில் மண்டகபடி, சிறப்பு பூஜைகள் நடந்தது. பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு இடையே பெருமாள் சொர்க்கவாசல் வழியாக மண்டபத்தினுள் எழுந்தருளினார். தேகளீச பெருமாள் நம்மாழ்வார்க்கு காட்சியளித்ததையடுத்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நம்மாழ்வார்  திருவாய்மொழி துவக்கமும், இராபத்து உற்சவம் துவங்கியது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட எஸ்.பி., நரேந்திரநாயர், டி.எஸ்.பி., கீதா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !