பாடலீஸ்வரர் கோவிலில் 15ம் தேதி ருத்ராபிஷேகம்
ADDED :3710 days ago
கடலுார்: கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் வரும் 15ம் தேதி பொங்கல் அன்று மாலை ஏகாதச ருத்ராபிஷேகம் நடக்கிறது. கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில், வரும் 15ம் தேதி தை பொங்கல் அன்று மாலை ஏகாதச ருத்ராபிஷேகம் நடக்கிறது. அதனையொட்டி அன்று மாலை 3:00 மணிக்கு அனுக்ஞை, சங்கல்பம், மகந்யாச பாராயணம், கலச பூஜையை தொடர்ந்து பாடலீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் ருத்ர ஜபம் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு வசோர்தரா ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு கலசாபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது.