உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணத்தில் ஏகதின லட்சார்ச்சனை

ஸ்ரீமுஷ்ணத்தில் ஏகதின லட்சார்ச்சனை

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 77வது ஜெயந்தி விழாவையொட்டி ஏகதின லட்சார்ச்சனை நடதது. ஸ்ரீமுஷ்ணத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 77வது ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி நித்தீஸ்வரர் சுவாமி கோயிலில் உள்ள பிரஹந்நாயகி அம்மனுக்கு சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஆராதனை, அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ரவிசுந்தர் குருக்கள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !