உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.6.65 லட்சம் காணிக்கை

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.6.65 லட்சம் காணிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உண்டியல்கள் நேற்று காலை திருவாரூர் உதவி ஆணையர் சிவராம்குமார், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஞானசேரகரன், ஆய்வாளர் மனோகரன் முன்னிலையில் திறக்கப்பட்டது. கோவில் கண்காணிப்பாளர் அசோகன், மேற்பார்வையாளர் ஜனசேகர் ஆகியோர் பங்கேற்றனர். இதில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், சில்லரை காசு, தங்கம், வெள்ளி நகைகள், உடல் உறுப்புகள் உட்பட பல்வேறு பொருட்களை நேற்று காலை மகளிர் குழுக்கள், பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர்கள் மூலம் தரம் பிரித்து எண்ணப்பட்டது. ரூபாய் ஆறு லட்சத்து 65 ஆயிரத்து 440 ரொக்கம், 396 கிராம் வெள்ளி, தங்கம் 39 கிராம், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 219 பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !