மஞ்சூர் முருகன் கோவில்களில் கிருத்திகை பூஜை
ADDED :3667 days ago
மஞ்சூர்: அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது. அன்னமலை முருகன் கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை பூஜை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடந்த கிருத்திகை பூஜையில், காலை, 6:30 மணிக்கு கணபதி பூஜை, 11:00 மணிக்கு கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், முருக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உட்பட,12 அபிஷேகம்நடந்தது.
சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அன்னதான
நிகழ்ச்சி நடந்தது. எம்.பாலாடா ஆனந்தமலை முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில், சித்த செல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், நவகிரகங்கள், ஏழு ஹெத்தையம்மன்களுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.