உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை கிறிஸ்தவர்களின் தவக்கால பாதயாத்திரை

மானாமதுரை கிறிஸ்தவர்களின் தவக்கால பாதயாத்திரை

மானாமதுரை: இடைக்காட்டூரில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டு நேற்று சிலுவை பாதயாத்திரை நடந்தது.

இடைக்காட்டூர் திரு இருதய திருத்தலத்திற்கு வருடம் தோறும் தவக்காலத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதமிருந்து பக்தர்கள் வருவதுண்டு. இந்தாண்டு தவக்காலம் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கியது.நேற்று 15ம் நாளில் மதுரையை சேர்ந்த பக்தர்கள் பலரும் பாதயாத்திரையாக முத்தனேந்தல் வந்தடைந்தனர்.அவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனையை நடத்திய பங்குத்தந்தை ரெமிஜியஸ் சிலுவையை சுமந்து இடைக்காட்டூர் தேவாலயம் வந்தடைந்தார். அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !