திருபுவனை அங்காளம்மன் கோவிலில் தேர் திருவிழா
ADDED :3533 days ago
திருபுவனை: மதகடிப்பட்டு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தேர் திருவிழா மார்ச்18ல், நடந்தது.
கோவில் பிரம்மோற்சவ விழா 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு 9.00 மணிக்கு சாமி வீதியுலா நடந்தது. 17ம் தேதி மயானக் கொள்ளை நடந்தது. முக்கிய விழாவான தேர்திருவிழா மார்ச்18 ல், நடந்தது. காலை 9.00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மதியம் 12.00 மணிக்கு மாடவீதி வழியாக அங்காளம்மன் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் மாலை 4.00 மணிக்கு செடல்போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். மார்ச்19, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.