உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவங்குடி கோவிலில் தீமிதி உற்சவம்

தேவங்குடி கோவிலில் தீமிதி உற்சவம்

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த தேவங்குடி திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி உற்சவத்தில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.  தீ மிதி உற்சவம் கடந்த 2ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும், காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00  மணிக்கு சுவாமி வீதியுலா, மகாபாரதம் கதைப் பாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்வாக நேற்று (22ம் தேதி) காலை 7:00 மணியளவில்  திரவுபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, தொடர்ந்து, அரவாண் கடபலி நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:00 மணியளவில் நடந்த தீமிதி உற்சவத்தில்  ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நாளை (23ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !