எக்கலாதேவியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
ADDED :3525 days ago
சேத்தூர்: சேத்தூர் எக்கலாதேவியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலையில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களும் சிறப்பு ஆராதனையும் நடந்தது. தொடர்ந்த அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. 4ம் திருநாளன்று அம்மன் ரிஷப வாகனத்திலும்,7 ம் திருநாளில் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 7ம் திருநாளன்று விரதமிருந்த பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் ஏப்ரல் 1ம் தேதி மாலையில் காப்பு கட்டிய பக்தர்கள் பூ இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாட்டை விழா கமிட்டி தலைவர் சுப்பிரமணியன்,செயலாளர் சண்முகநாதன், பொருளாளர் பொன்னுச்சாமி, அறங்காவலர் குருசாமி மற்றும் நிர்வாக குழுவினர் செய்து வருகிறார்கள்.