உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம்!

ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி நீருக்கு வெளியே முழு தரிசனம்!

 மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி, நீருக்கு வெளியே முழுமையாக தெரிகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம், 77 அடிக்கு மேல் உயரும்போது, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை மற்றும் கருவறை முகப்பு, முழுமையாக நீருக்குள் மூழ்கும். நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 56.32 அடியாக சரிந்ததால், நீருக்குள் மூழ்கியிருந்த நந்தி சிலை மற்றும் கருவறை கோபுர முகப்பு முழுமையாக வெளியில் தெரிந்தது. அதை, சுற்றுலா பயணிகள் ஏராளமானோர், பரிசலில் சென்று பார்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !