பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவக்கம்
போடி: போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா இன்று முதல் துவங்கி 8 நாட்கள் நடக்கிறது. தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி,இன்று காலை 10 மணிக்கு பெரியாண்டவர் கோயிலிருந்து சிவன் மற்றும் திருஉண்டியலை நகரின் முக்கிய ரோடு வழியாக மலை கோயில் கொண்டு செல்லபட்டு இன்று விழா துவங் கிறது. திருவிழாவில் சிவன், லட்சுமிநாராயணன், முருகன் வள்ளி,தெய்வானைக்கு தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது. தக்கார் பாலகிருஷ் ணன் தலைமை வகிக் கிறார். அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் முன்னிலை வகிக்கிறார். அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள், வர்த்தகர்கள் சங்கம்,பூ வியாபாரிகள் சங்கம், ஏலக்காய் வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட பலர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிவனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடக்கிறது. திருவிழா இன்று துவங்கி ஏப். 22 வரை நடக்கிறது.