ஆத்தூர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :3457 days ago
ஆத்தூர்: ஆத்தூரில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர் அருகே, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், பிரதோஷ பூஜையொட்டி, சொர்ணபுரீஸ்வரர் மற்றும் நந்தி சிலைக்கு, பால், தயிர், வெண்ணெய், மஞ்சள், தேன் உட்பட, 16 வகையான அபிஷேகங்கள், நேற்று முன்தினம் நடந்தன. நேற்று முதல் அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் துவங்கியதால், சிவபெருமானை குளிர்விக்கும் மூலிகை அபிஷேகம், மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. மாலை, 5 மணியளவில், சொர்ணபுரீஸ்வரர், நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதேபோல், ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும், பிரதோஷ பூஜைகள் நடந்தன.