குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு!
ADDED :3573 days ago
சில குழந்தைகள் இரவு வேளையில் துங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக துவங்கவும், திருப்பட்டூர் திருத்தல கால பைரவரை பெற்றோர் வழிபடுகின்றனர். அர்த்த ஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியை பெற்றுச் சென்று குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு, செய்வதால், குழந்தைகளுக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.