எழுவங்கோட்டையில் தேரோட்டம்
ADDED :3429 days ago
தேவகோட்டை: தேவகோட்டை அருகே எழுவங்கோட்டையில் விஸ்வநாதர், அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 8 தினங்களாக நடந்தது. தினமும் சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 9ம் நாளான நேற்று அகிலாண்டேஸ்வரி சமேதகராக விஸ்வநாதர் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருக்க பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது.