வன்னிமரத்தை நினைத்தாலும் வழிபட்டாலும் பாவவினை தீரும் என்பது சரியா?
ADDED :3626 days ago
மதுரையின் பெருமையைக் கூறும் திருவிளையாடல் புராணத்தில் அக்கோவிலில் இருந்து மறைந்த வன்னி மரத்தை சுவாமி மீண்டும் தோற்றுவித்ததாக கூறப்பட்டுள்ளது. சிவன், விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்ய வன்னி இலை உகந்தது. சிறப்பாக சனிபகவானுக்கு உரியது வன்னிமரம். இதை வழிபட்டால் சனி தோஷமும், பாவமும் நீங்கும். இவ்வளவு பெருமை வாய்ந்த மரத்தை மனதால் நினைத்தால் கூட புண்ணியம் தான்.