காணிப்பாக்கம் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.77 லட்சம்
ADDED :3423 days ago
நகரி: காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில், 23 நாட்களில், பக்தர்கள், 77.68 லட்சம் ரூபாயை, காணிக்கையாக உண்டியலில் செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை செலுத்துகின்றனர். அந்த வகையில், 23 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் அதிகாரி பூர்ண சந்திர ராவ் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 77,68,680 ரூபாய் ரொக்கம், 28 கிராம் தங்கம், 920 கிராம் வெள்ளி, 210 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்தன.