மீனாட்சி அம்மன் கோவிலில் கற்தூண்களை புதுப்பிக்கும் பணி துவக்கம்!
ADDED :5139 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெற்றாமரைக்குளத்தின் மேற்கு பகுதி கற்தூண்களை சுத்தமாக்கும் பணி துவங்கியது. விரைவில் புதுமண்டபம், சிவந்தீஸ்வரர் சன்னதியையும் "பளிச் செய்யும் பணி நடக்கும். இக்கோயிலுக்கு 2008ல் நடந்த கும்பாபிஷேகத்திற்காக பல கோடி ரூபாயில் திருப்பணிகள் நடந்தன. அப்போது சுண்ணாம்பு அடிக்கப்பட்ட, "எனாமல் பெயின்ட்டால் கலைநயம் அழிக்கப்பட்ட கற்தூண்கள், அங்கீகரிக்கப்பட்ட "வாட்டர் கெமிக்கல் முறையில் சுத்தமாக்கப்பட்டது. அப்போது பொற்றாமரைக்குளம் விபூதி பிள்ளையார் சன்னதியில் இருந்து அம்மன் சன்னதி செல்லும் வழியில் உள்ள கற்தூண்களை புதுப்பிக்கும் பணி நடக்கவில்லை. இப்பணி தற்போது மீண்டும் துவங்கியது.