தலவிருட்சம் என்பது தானாக வளருவதா? வளர்க்கப்படுவதா?
ADDED :3548 days ago
பழங்காலத்தில் எந்த ஊரிலும் இவ்வளவு ஜனநெருக்கடி மற்றும் வீடுகள் இல்லை. ஆறுகள், குளங்கள், மரம், செடி, கொடிகள் சூழ்ந்த சோலைகளாக இருந்தன. கோவில்களும் பெரிய அளவில் இல்லை. ஏதாவது ஒரு தெய்வ சக்தி வாய்ந்த மரத்தின் அடியில் இறைவன் குடியிருந்தார். அவரையே மக்கள் வணங்கினர். பின்னால் கோவில் உருவாவதும், இறைவன் எந்த மரத்தின் கீழ் இருந்தாரோ அதுவே தலவிருட்சம் ஆயிற்று. நம்மால் வளர்க்கப்படாமல் தாமே தோன்றியவை அவை. அத்தலத்து இறைவனும் தானே தோன்றியவராக விளங்கினார். இந்த தெய்வங்களையே சுயம்பு மூர்த்தி என்கிறார்கள்.0