தும்மலக்குண்டு செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3432 days ago
வடமதுரை: வடமதுரை பேரூராட்சி தும்மலக்குண்டு செல்வவிநாயகர் கோயில் தெருவில் இருக்கும் செல்வவிநாயகர், நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தக்குடங்கள், முளைப்பாரி அழைப்புடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை இரண்டாம் கால பூஜைகள் நிறைவடைந்ததும் கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.