உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்!

சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்!

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 4ம் தேதி மூலவர் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.  அமாவாசையையொட்டி, அன்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூபம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !