உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்தையில் ஊஞ்சல் உற்சவம்

அனுமந்தையில் ஊஞ்சல் உற்சவம்

மரக்காணம்: மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.  விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தனகாப்பு மற்றும் தீபாரதனை நடந்தது.   மாலை 5:30  மணி முதல் இரவு 11:30 வரை யாகசாலை நிகழ்ச்சி நடந்தது. இரவு 12:00 மணிக்கு, அம்மன் மலர் அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது.  பக்தர்கள் தீசட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அறங்காவலர் சின்னசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ரஜேந்திரன், மற்றும் சீத்தாராமன், பாலசுந் தரம், மோகன், ஆறுமுகம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !