உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எருமனுார் கோவில் செடல் திருவிழா

எருமனுார் கோவில் செடல் திருவிழா

மங்கலம்பேட்டை: எருமனுார் மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் ஏராளமானோர் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விரு த்தாசலம் அடுத்த எருமனுார் மாரியம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து  தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.  நேற்று முன்தினம் 3ம்  தேதி காலை 8:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு நடந்த செடல் உற்சவத்தில் ஏராளமானோர் செடல் அணிந்து ÷ நர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !