கீழக்கரை கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED :3365 days ago
கீழக்கரை: கீழக்கரை தட்டாந்தோப்பு பத்திரகாளியம்மன், நாராயணசுவாமி கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பத்திரகாளியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் நெய்விளக்கேற்றி, சக்தி ஸ்தோத்திரம் பாடினர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.