திருமலையில் தொடரும் பக்தர்கள் கூட்டம்!
ADDED :5135 days ago
நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். புரட்டாசி மாதம், ஆண்டு பிரமோற்சவ விழா துவங்குவதை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஞாயிறன்று, லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்து வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர். இலவச தரிசன கியூவில், 15 மணி நேரமும், 300 ரூபாய் சிறப்பு தரிசன கியூவில், 6 மணி நேரமும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்றும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.