உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழப்பாலையூர் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா

கீழப்பாலையூர் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா

கம்மாபுரம்: கீழப்பாலையூர் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா நடந்தது. கம்மாபுரம் அடுத்த கீழப்பாலையூர்  முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா, கடந்த 26ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் காலை 7:00  மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 4ம் தேதி காலை 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை  6:00 மணிக்கு திருவிளக்குப் பூஜை நடந்தது.  தொடர்ந்து 5ம் தேதி காலை 8:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 11:00  மணிக்கு செடல் உற்சவம் நடந்தது.  ஏராளமான பக்தர்கள் செடலணிந்து நேர்த்தி கடன் செலுத்தினர். 6ம் தேதி காலை 8:00 மணிக்கு  மஞ்சள் நீர் உற்சவம், பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தலுடன் விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !