புதுச்சேரி ஏழை மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்
ADDED :3507 days ago
புதுச்சேரி: புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் விழாவில், (ஆக.,12) வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் ஆடி மகோற்சவம் கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து நடந்து வந்த விழாவில் (ஆக.,12) வெள்ளிக்கிழமை காலை பால் அபிஷேகமும், இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடு களை உற்சவதார்கள் மற் றும் விழா குழுவினர் செய்தனர்.