உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ஆவணி பால்குட விழா!

பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ஆவணி பால்குட விழா!

பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் 24 ம் ஆண்டு ஆவணி மற்றும் பால்குட விழா நடந்தது. ஆக. 8 ம் தேதி காலை கணபதி ஹோமம், காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து அம்மன் சந்தனம், மீனாட்சி, காமாட்சி, குமரி அம்மன், சரஸ்வதி, மகாலட்சுமி, சிவபூஜை, ராஜராஜேஸ்வரி, அன்ன பூரணி உள்ளிட்ட அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆக. 17 ல் காலை 7 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புறப்பட்ட பால்குடம்முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, இரவு திருவிளக்கு பூஜைக்குப் பின் மின்தீப தேரில் அம்மன் வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !