கீழப்பாவூர் கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை
ADDED :5126 days ago
பாவூர்சத்திரம்:கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலசாமி கோயிலில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. கீழப்பாவூரில் உள்ள வேணுகோபாலசாமி கோயிலில் கடந்த 100 நாட்களாக கோடி அர்ச்சனை விழா தினமும் நடைபெற்று வருகிறது. விழாவில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடக்கிறது.விழாவில் சுவாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம், சாயரட்சை, கருடசேவை, சுவாமி வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.