உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவிலில் பாலாபிஷேகம்

ஷீரடி சாய்பாபா கோவிலில் பாலாபிஷேகம்

திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று பாலாபிஷேகம் நடந்தது. திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு, 108 குடம் பாலாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மூலவருக்கு வண்ண மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. அதேபோல், தலையாறிதாங்கல் கிராமத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலிலும், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !