உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓகோன்னு வாழ ஓணத்தன்று பாடுங்க!

ஓகோன்னு வாழ ஓணத்தன்று பாடுங்க!

திருமாலின் ஐந்தாவது அவதாரமான வாமனப்பெருமாளை எண்ணி நம்மாழ்வார் பாடிய பாடல்களை ஓண நாளில், பூக்கோலமிட்டு படித்தால் செல்வம் சேரும். திருமணம் கைகூடும். மழலைப்பேறு வாய்க்கும். பாவம் பறந்தோடும். ஓகோவென்று வாழலாம்.

உருகுமால் நெஞ்சம் உயிரின் பாரமன்றி
பெருகுமால் வேட்கையும் என்செய்கேன்
தொண்டனேன்
தெருவெல்லாங் காலிகழ் திருக்காட்கரை
மருவிய மாயன்றன் மாயம் நினைதொறே.

நினைதொறும் சொல்லும் தொறும்
நெஞ்சிடிந்துருகும்
வினைகொள் சீர்பாடிலும் வேமெனதாருயிர்
கனைகொள் பூஞ்சோலைத்
தென்காட்கரையென்னப்பா
நினைகிலேன் நானுனக்கு ஆட்செய்யும்
நீர்மையே.

நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து
என்னை
ஈர்மைசெய்து என்னாயிராம் என்னுயிருண்டான்
சீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன்
கார்முகில் வண்ணன்றன் கள்வமறிகிலேன்.

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறிகமழ் சோலைத் தென்காட்கரை
யென்னப்பன்
சிறிய வென்னாயிருண்ட திருவருளே.

திருவருள் செய்பவன் போல என்னுள் புகுந்து
உருவமுமாருயிரும் உடனே யுண்டான்
திருவளர் சோலைத் தென்காட்கரை
யென்னப்பன்
கருவளர்மேனி என்கண்ணன் கள்வங்களே

என்கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்
அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது
புன்கண்மை யெதிப் புலம்பி இராப்பகல்
என்கண்ணன் என்று அவன் காட்கரையேத்துமே.

காட்கரையேத்தும் அதனுள்கண்ணாவென்னும்
வேட்கை நோய்கூர நினைந்து கரைந்துருகும்
ஆட்கொள்வானொத்து என்னுயிருண்ட
மாயனால்
கோட்குறைபட்டது என்னாருயிர் கோளுண்டே.

கோளுண்டானன்றி வந்து என்னுயிர்
தானுண்டான்
நாளுநாள் வந்து என்னை முற்றவும்
தானுண்டான்
காள நீர்மேகத் தென்காட்கரை யென்னப்பற்கு
ஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டதே.

 ஆருயிர் பட்டது எனதுயிர் பட்டது
பேரிதழ்த் தாமரைக்கண் கனி வாயதோர்
காரெழில் மேகத் தேன்காட்கரைகோயில் கொள்
சீரெழில்நால் தடந்தோள் தெய்வவாரிக்கே.

வாரிக் கொண்டு உன்னைவிழுங்குவன்
காணிலென்று
ஆர்வற்றவென்னை யொழிய என்னில் முன்னம்
பாரித்து தானென்னை முற்றப் பருகினான்
காரொக்கும் காட்கரையப்பன் கடியனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !