உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்தது பக்தர்கள் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்தது பக்தர்கள் கூட்டம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த, பண்ணாரி மாரியம்மன் கோவிலில், புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு, பக்கதர்கள் குவிந்தனர்.

பண்ணாரி அம்மனுக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர், சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரிக்கு பக்தர்களின் வசதிக்காக  செப்.,30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !