ஊட்டி முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :3310 days ago
ஊட்டி: ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ் அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில், சித்தி விநாயகர், ஆனந்தமலை முருகன், ஏழு ஹெத்தையம்மன், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன. இன்னிசை, அருளுரை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.