உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி.. அம்பிகையை பூஜித்து வழிபடுவதற்கான நடைமுறைகள்!

நவராத்திரி.. அம்பிகையை பூஜித்து வழிபடுவதற்கான நடைமுறைகள்!

முப்பெருந்தேவியரையும் போற்றும் ஒப்பற்ற நவராத்திரி, அன்று ஒன்பதுநாட்களும் அம்பிகையை பூஜித்து வழிபடுவதற்கான நடைமுறைகள் 9 நாட்களும் வழிபட முடியாதவர்கள், கடைசி மூன்று நாட்கள் விரதம் இருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் மட்டுமாவது அம்பாளை பூஜித்து அருள்பெறலாம்.

1. கோலம் போடும் பொருள்: அரிசி மாவு
கோல வகை: பொட்டு
ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: பச்சிலை
தானம்: சோழி, பொன்
பொட்டு: புனுகு
ராகம்: தோடி
வாத்தியம்: மிருதங்கம்
மலர்: வில்வம்
நைவேத்தியம்: வெண்பொங்கல்
குமாரியின் பெயர்: குமாரி
மந்திரம்: ஓம் கௌமார்யை நம:
சுவாசிநியின் பெயர்: சைலபுத்ரீ
மந்திரம்: ஓம் சைலபுத்திரியை நம:

பலன்: துக்கம், ஏழ்மை அகலும். பொருள், ஆயுள் பலம் விருத்தியாகும்.


2. கோலம் போடும் பொருள்: கோதுமை மாவு
கோல வகை: கட்டம்
ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: பூவாங்கிழங்கு
தானம்: வெள்ளி குன்றிமணி
பொட்டு: ஜவ்வாது
ராகம்: கல்யாணி
வாத்தியம்: புல்லாங்குழல்
மலர்: துளசி
நைவேத்தியம்: புளியோதரை
குமாரியின் பெயர்: த்ரிபுரா
மந்திரம்: ஓம் த்ரிபுராயை நம:
சுவாசிநியின் பெயர்: ப்ரஹ்மசாரிணீ
மந்திரம்: ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம:

பலன்: தன தான்ய புத்ர பௌத்ர விருத்தி.


3. கோலம் போடும் பொருள்: முத்து
கோல வகை: மலர்
ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: குங்குமப்பூ
தானம்: முத்து, தட்டைபவளம்
பொட்டு: கஸ்தூரி
ராகம்: காம்போதி
வாத்தியம்: வீணை
மலர்: மரு
நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்
குமாரியின் பெயர்: கல்யாணி
மந்திரம்: ஓம் கல்யாண்யை நம:
சுவாசிநியின் பெயர் : சந்த்ர கண்டா
மந்திரம்: ஓம் சந்த்ர கண்டாயை நம:

பலன்: வித்யை, ராஜ்யம், சுகம் கிடைக்கும்.


4. கோலம் போடும் பொருள் : அட்சதை (முனை முறியாத முழு அரிசி)
கோல வகை: படிக்கட்டு
ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: பன்னீர்
தானம்: பவளம், கிளிஞ்சல்
பொட்டு: அரகஜா
ராகம்: பைரவி
வாத்தியம்: கோட்டு வாத்தியம்
மலர்: கதிர் பச்சை
நைவேத்தியம்: கதம்பம்
குமாரியின் பெயர்: ரோஹிணி
மந்திரம்: ஓம் ரோஹிண்யை நம:
சுவாசிநியின் பெயர்: ஓம் கூஷ்மாண்டா
மந்திரம்: ஓம் கூஷ்மாண்டாயை நம:

பலன் : சகல நோய் நொடிகளும் நீங்கும்.

5. கோலம் போடும் பொருள்: கடலை
கோல வகை: பறவையினம்
ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: சந்தனம்
தானம்: வைடூர்யம், செப்பு
பொட்டு: சந்தனம்
ராகம்: பந்துவராளி
வாத்தியம்:  ஜல்லரி
மலர்: சந்தன இலை
நைவேத்தியம்: தயிர்சாதம்
குமாரியின் பெயர்: சண்டிகா
மந்திரம்: ஓம் சண்டிகாயை நம:
சுவாசிநியின் பெயர்: ஸ்கந்தமாதா
மந்திரம்: ஓம் ஸ்கந்தமாதாயை நம:

பலன்: ஐஸ்வர்யம் விருத்தியாகும்; புத்திரப்பேறு அமையும்.

6. கோலம் போடும் பொருள்: பருப்பு
கோலை வகை: தேவியின் நாமம்
ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: வாசனை திரவியம்
தானம்: கோமேதகம்
பொட்டு: குங்குமம்
ராகம் : நீலாம்பரி
வாத்தியம்: பேரி வாத்தியம்
மலர்: தும்பை இலை
நைவேத்தியம்: தேங்காய் சாதம்
குமாரியின் பெயர்: காளிகா
மந்திரம்: ஓம் காள்யை நம:
சுவாசிநியின் பெயர்: காத்யாயினி
மந்திரம்: ஓம் காத்யாயின்யை நம:

பலன்: எதிரிகள் தொல்லை முழுமையாக விலகும்.

7. கோலம் போடும் பொருள்: மலர்
கோல வகை: திட்டாணி
ஸ்நானத்துக்கு உரிய திரவியம்: நலங்கு மஞ்சள்
தானம்: புஷ்பராகம்
பொட்டு: சாந்து
ராகம்: பிலஹரி
வாத்தியம்: படகம்
மலர்: பன்னீர் இலை
நைவேத்தியம்: எலுமிச்சை சாதம்
குமாரியின் பெயர்: சாம்பவீ
மந்திரம்: ஓம் சாம்பவ்யை நம:
சுவாசிநியின் பெயர்: காலராத்ரீ
மந்திரம்: ஓம் காலராத்ரியை நம:

பலன்: புகழ் கிடைக்கும்.

8. கோலம் போடும் பொருள்: காசு
கோல வகை: பத்மம்
ஸ்நானத்திற்கு உரிய திரவியம்: மருதோன்றி
தானம்: மரகதம்
பொட்டு: ஸ்ரீசூர்ணம்
ராகம்: புன்னாக வராளி
வாத்தியம்: கும்மி
மலர்: விபூதி பச்சை
நைவேத்தியம்: பாயஸம்
குமாரியின் பெயர்: துர்கை
மந்திரம்: ஓம் துர்காயை நம:
சுவாசிநியின் பெயர்: மஹா கவுரீ
மந்திரம்: ஓம் மஹா கவுர்யை நம:

பலன் : எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்.

9. கோலம் போடும் பொருள்: பச்சைக் கற்பூரம்
கோல வகை: ஆயுதம்
ஸ்நானத்திற்கு உரிய திரவியம்: புஷ்பம் கலந்த பரிமள நீர்
தானம் : வைரம்
பொட்டு: மை
ராகம்: வஸந்தா
வாத்தியம்: கோலாட்டம்
மலர்: மருக்கொழுந்து
நைவேத்தியம்: அக்கார அடிசில்
குமாரியின் பெயர்: சுபத்ரா
மந்திரம்: ஓம் சுபத்ராயை நம:
சுவாசிநியின் பெயர்: ஸித்திதாத்ரீ
மந்திரம்: ஓம் ஸித்திதாத்ரீயை நம:

பலன் : விரும்பியதை பெறலாம்; மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் அளிப்பாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !