திருத்தணி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் பாலாபிஷேகம்
ADDED :3299 days ago
திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், நடந்தது. மாலை, 3:00 மணி முதல், 4:30 வரை ராகுகால பூஜையில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு வழிபட்டனர்.