உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்வ மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

வில்வ மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

வில்வ மரத்தை வீட்டில் வளர்க்கலாம்; வளர்க்கக் கூடாது என்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்றும் பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்கள். அந்த நாட்களில் வில்வ மரத்தின் அருகே போகக் கூடாது. பொதுவாக, வில்வ மரத்தின் வாசனை, அதன் வேர்களில் உள்ள குளிர்ச்சி ஆகியவற்றுக்கு பாம்புகள் வரும். அதனாலேயும் பயப்படுவர்கள். ஆனால், வீட்டில் வில்வ மரத்தை வைத்துக் கொள்வது மிகவும் விசேஷம். தவ விருட்ஷோத பில்வ: என்று சூக்தத்தில், மகாலட்சுமி அந்த மரத்தில் நித்யவாசம் செய்வதாகச் சொல்கிறது. எனவே, யார் வீட்டில் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமத்துடன் வில்வ மரத்தை வளர்க்கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !