உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகோபால் சித்தருக்கு 8ம் தேதி கும்பாபிஷேகம்

ராஜகோபால் சித்தருக்கு 8ம் தேதி கும்பாபிஷேகம்

புதுச்சேரி: நாவற்குளம் ஸ்ரீலஸ்ரீ ராஜகோபால் சித்தருக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் குருபூஜை விழா வரும் 8ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி நாவற்குளத்தில் ஸ்ரீலஸ்ரீ ராஜகோபால் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்குள்ள சித்தருக்கு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மற்றும் மூன்றாம் ஆண்டு குருபூஜை விழா வரும் 8ம் தேதி நடக்கிறது.அதையொட்டி நாளை (7ம் தேதி) காலை 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு முதற்கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 8ம் தேதி காலை 5:30 மணிக்கு மஹா அபிஷேக ஆராதனை, 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோ-பூஜை, திரவிய ஹூதி, பூர்ணா ஹூதி, மஹா பூரணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் ராஜகோபால சித்தருக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் குருபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை சித்தரின் சீடர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !