உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் ரூ.23.92 லட்சம் உண்டியல் வசூல்

ராமேஸ்வரம் கோயிலில் ரூ.23.92 லட்சம் உண்டியல் வசூல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 23.92 லட்சம் ரூபாய் வசூலானது. கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக நவ.,8 முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் திறந்து எண்ணுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 15 நாட்களுக்கு பிறகு நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் 23 லட்சத்து 92 ஆயிரத்து 658 ரூபாய் ரொக்கம், 12 கிராம் தங்கம், 950 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர்கள் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !